பழமொழிகள்

பன்னாட்டுப் பழமொழிகள்

அங்கேரி

- நரகத்தின் கதவுகள் எப்போதும் - திறந்திருக்கின்றன -
  நள்ளிரவலுங்கூட

- உன்னை அளவின்றிப் புகழ்கிறவன் ஏற்கனவே உன்னை
  ஏமாற்றிவிட்டான் அல்லது ஏமாற்ற விரும்புகிறான்.

- ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான்,
  மற்றக் கையால் அணைக்கிறான்

- செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.

- உனது கௌரவம் உனது நாக்கின் நுனியில் இருக்கிறது.

- பேராசை முடிகிற இடத்தில் சந்தோசம் தொடங்குகிறது.

- பல சயமங்களில் முப்பத்திரண்டு பற்களும் சேர்ந்து நாக்கை     அடக்கமுடிவதில்லை

- பணம் பேசுகிறது, நாய்கள் குரைக்கிறது

- தாயைப் பார்த்து மகளை மணம் செய்!

- கணவன் தலைவன்,மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்

- ஒரு பாவத்தை பலர் செய்தாலும் அது பாவமே

- தங்கப் படுக்கையினால் நோயாளிக்கு என்ன பயன்!

- கடவுளின் கரம் என்றும் திறந்திருக்கின்றது,என்றும் நிறைந்திருக்கிறது

- அயலான் தேவைப்படாத அளவுக்கு யாரும் அவ்வளவு பொிய பணக்கரன் இல்லை

- உன் நண்பனுக்குக் கூட உண்மையைச் சொல்ல மறுக்காதே!

- உன்னை யார் நேசிக்கிறார்களோ, அது ஒரு நாயாக இருந்தாலும்கூட,நீர் அவர்களை நேசிப்பாயாக.

- ஒருவன் நிர்வாணமாக இருக்கும்போது,எழுந்து நிற்பதைவிட    உட்கார்ந்திருப்பது மேலானது.

- நாணமில்லாத பெண் உப்பில்லாத உணவு மாதிரி.

- நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி, ஒருவன் அதை தனக்கே செய்கிறான்.

- ஒவ்வொருவனும் தன்னை அறிஞன் என்று நினைக்கின்றான்!
   அதனால்தான்உலகில் இத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள்.